பயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம்: இங்கிலாந்து தூதுவர்
Read Time:1 Minute, 17 Second
பயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம் என்று சிறிலங்காவுக்கான இங்கிலாந்து தூதுவர் டொமினிக் சில்காட் தெரிவித்துள்ளார்.அண்மையில் சிறிலங்கா வந்த இங்கிலாந்து கடற்படை தளபதி ஜோனதன் பேண்ட் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட டொமினிக் சில்காட் பேசியதாவது:
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் சிறிலங்காவுடன் இங்கிலாந்து இணைந்து கொள்ளும். இரு நாடுகளும் ஜனநாயக பாரம்பரியமிக்கவை என்பதால் மட்டும் அல்ல. இந்த ஜனநாயக முறையை நிராகரிக்கிற ஒரு அமைப்பாக பயங்கரவாதம் இருப்பதால் இணைந்து நிற்போம்.
திருமலை கடற்படைத் தளத்தை எமது இங்கிலாந்து தளபதி பார்வையிட்ட போதும் அவரது இதர பயணத்தின் போதும் மிகப் பிரம்மாண்ட வரவேற்பளித்த சிறிலங்காவைப் பாராட்டுகிறோம் என்றார் டொமினிக் சில்காட்.