கோப்பாய் கிராமசேவையாளர் சுடப்பட்டு வைத்தியசாலையில் மரணம்
Read Time:44 Second
யாழ்ப்பாணம் கோப்பாய் கிராமசேவையாளர் நேற்றிரவு (08-06-2006) சுடப்பட்டு காயத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இவர் மானிப்பாய் வீதி கோப்பாய் மத்தி, கோப்பாயைச் சேர்ந்த ஜோசப் ரட்ணராஜா (51) என்பவர் ஆவார். பிந்திய தகவலின்படி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிராமசேவையாளர் ஜோசப் ரட்ணராஜா (51) மரணமானார்.