பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் குத்திக் கொலை

Read Time:1 Minute, 23 Second


பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது ஆண் நண்பர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள மேம்பாலத்தடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டை பொலிஸாரின் விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார். இப்பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தரான இவரது ஆண் நண்பர், இச்சம்பவத்தின் பின்னர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேகநபர் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post TV பார்ப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் இளைஞன் தற்கொலை
Next post சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம் (PHOTO)