இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
Read Time:56 Second
சட்டவிரோதமான முறையில், இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் கல்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவூ பிறப்பிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி கடற்பரப்பில், மூன்று இயந்திரப்படகுகள் மூலம், கடற்தொழிலில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating