ஜேவிபியின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளர் கொலை?
Read Time:1 Minute, 4 Second
பாதுக்க – பொரகெதர சமிந்து உயண மைதான வளாகத்தில் முச்சக்கர வண்டிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மொரகஹஹேன பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடாத்தி வருகின்றனர். குறித்த நபர் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து சிறிதுகாலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முச்சக்கர வண்டி இருந்த இடத்திற்கு அருகில் மது போத்தல் ஒன்றும் கத்தியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating