வெளிநாட்டவரின் கடனட்டையில் பொருட்கள் வாங்கியவர் கைது
Read Time:57 Second
வெளிநாட்டை சேர்ந்த ஒருவரின் கடனட்டையை திருடிச்சென்று அதில் பொருட்களை கொள்வனவு செய்த ஹோட்டல் பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பலப்பிட்டிய ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டைச்சேர்ந்தவரின் கடனடடையை திருடிச்சென்று காலியிலுள்ள பல்லங்காடியில் குறித்த சந்தேநபர் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். குறித்த சந்தேகநபர் கடனட்டையை மூன்று சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி சுமார் 60 இலட்சம் பெறுமதியான பொருட்களையே கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating