பஸ் – வான் மோதி விபத்து: ஒருவர் பலி எண்மர் படுகாயம்
Read Time:1 Minute, 20 Second
ஹங்வெல்ல – வனஹகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்து மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (09) காலை 06.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மஹரகம டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸும் எதிர் திசையில் பயணித்த வேனும் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வேனின் சாரதி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். காயமடைந்த எண்மர் ஹோமாகம மற்றும் கொஸ்கம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பெண்களும் இரு ஆண்களும் அடங்குவர். இவர்கள் அம்பாறை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். விபத்தை அடுத்து பஸ் சாரதி கைது செய்யப்பட்டு ஹங்வெல்ல பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
Average Rating