அமெரிக்க தீர்மானம் நிறைவேறினாலும் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை -அரியநேத்திரன் எம்.பி
ஜெனீவாவில் அமெரிக்க அரசினால் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டாலும் அவை நிறைவேற்றத் தேவையானவற்றை அமெரிக்க செய்யூம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஏனைய மாநிலங்களுக்கு பரவி வரும் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்தியா இலங்கைக்கு சார்பாக செயற்படமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவூம் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவூள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவூ வழங்காவிட்டாலும் அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெறும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சு+ழல் ஒருபோதும் இந்தியாவை இலங்கைக்கு சார்பாக வாக்களிக்க செய்யூம் என்று நான் நம்பவில்லை. உலக நாடுகள் இந்த தீர்மானம் தொடர்பில் தௌpவான நிலைப்பாட்டில் இருப்பதை தாங்கள் அறியக் கூடியதாகவூள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெறும் வாக்கெடுப்பே தீர்மானிக்கும். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது இலங்கையை பெரிதளவில் பாதிக்கும் என்று நாங்கள் கருதவில்லையெனவூம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating