தி.மு.க விலகினாலும் அரசுக்கு பாதிப்பில்லை -அமைச்சர் ப.சிதம்பரம்
Read Time:1 Minute, 6 Second
திராவிட முன்னேற்ற கழகம் மத்திய அரசிலிருந்து விலகினாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் விலகுவதாக அதன் தலைவர் முத்துவேல் கருணாநிதி வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஒரு சிரேஷ்ட அரசியல் தலைவர். எனவே, அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகைளை மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து சிறந்த முடிவு எடுக்கப்படும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Average Rating