71 வயது மூதாட்டியை தாக்கி பணம் நகைகள் கொள்ளை

Read Time:1 Minute, 45 Second

stoleவீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள்; கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. 71 வயது முதாட்டியும் கணவரும் தமது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவேளை, முகத்தில் கறுப்பு துணி கட்டிய 4 பேர் வீட்டின் சமையலறை முகட்டின் ஊடாக வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை தாக்கியுள்ளனர்.

இதனால், அவ்விருவரும் மயக்கம் அடைந்துவிட்டனர். இதனையடுத்தே 6 லட்சத்து 67 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளைக்கோஷ்டியினர் கொள்ளையடித்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முதாட்டி நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார்.

அம் முறைப்பாட்டில், 12 ½ பவுண் நகைகள், 30 ஆயிரம் ரூபா பணம், 10 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப் பிரமாண்டமான செக்ஸ் பார்ட்டி பொலிசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!! (PHOTOS)
Next post இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் ஃபேஸ்புக் முதலிடம்!!