இந்தியாவில் இலங்கையர்கள் சென்ற பஸ் விபத்தில் தப்பியது
Read Time:59 Second
இந்தியாவுக்கு யாத்திரை சென்ற இலங்கை பொதுமக்கள் சிலர் பஸ் தீவிபத்து ஒன்றிலிருந்து தப்பியுள்ளனர். இலங்கையர்கள் 16 பேர் வரை குறித்த பஸ்சில் பயணித்துள்ளனர். உலகின் உயர்ந்த பௌத்த தூபியாக கருதப்படும் கெசாரியா தூபியை தரிசிப்பதற்கே இந்திய யாத்திரிகர்களுடன் இவர்களும் சென்றுள்ளனர். பஸ்சில்புகைமண்டலம் ஏற்பட்டதும் யாத்திரிகர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது பட்னாவிலிருந்து 110 கிலோமீற்றர் வடகிழக்கு பகுதிலேயே குறித்த கெசாரியா தூபி அமைந்துள்ளது.
Average Rating