வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது
Read Time:59 Second
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹசித்த மடவல கொலை சந்தேகநபர்களை விடுவிக்க, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக வாஸ் குணவர்தன மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை வழக்கில் வாஸ் குணவர்தன பிரதான சந்தேகநராக அடையாளம் காணப்பட்டுள்ளமையின் காரணமாக, அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating