72 வயதான பெண்ணின் வாயில் துணியைத் திணித்து துஷ்பிரயோகம்!
Read Time:1 Minute, 18 Second
பதுரலிய, ஹெடிகல்ல பிரதேசத்தில் 72 வயது வயோதிபப் பெண்ணொருவரின் வாயில் துணியைத் திணித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திவிட்டு அவரது வீட்டிலுள்ள பணம், தங்க நகைகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் தந்தை, மகன் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை மத்துகம நீதிவான் நீதிமன்ற நீதவான் சமரி வீரசூரிய முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
பாலியல் துஷ்பிரயேகம், கொள்ளை, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது போன்ற குற்றச்சாட்டுகள் சந்தேக நபர்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
18 ஆம் திகதி சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்தும் படியும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Average Rating