பொத்துவிலில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டவர் கைது
Read Time:52 Second
பொத்துவில் திம்மிரிகஸ்யாய வனப் பகுதியில் ஒரு பளப்பளவு காணியில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான சந்தேகநபர் ஒருவரே நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கு செய்கையிடப்பட்டிருந்த கஞ்சா பொலிஸாரினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இந்நபரிடமிருந்த துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டனர்.
Average Rating