பத்து வயது சிறுவன் சடலமாக மீட்பு
Read Time:1 Minute, 21 Second
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் தேயிலை பிரதேசத்தில் உள்ள குளமொன்றிலிருந்து 10 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டுக்கலை தமிழ் வித்தியாலத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவந்த ஜெபமாலை அந்தனி ரொபட் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
பின் இரவு நேரமாகியும் சிறுவன் வீட்டுக்கு வராததை அறிந்த பெற்றோர் பிரதேச மக்களுடன் சேர்ந்து தேடியுள்ளனர். பின்னம் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் உள்ள குளமொன்றிலிருந்து சிறுவன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating