முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு இடமில்லை; அரசாங்கம் அறிவிப்பு

Read Time:1 Minute, 35 Second

mulli-2009இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத் தூபி அமைக்கும் யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு நினைவுத் தூபிகள் அமைக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி உயிரிழந்தவர்களுக்காக இவ்வாறு நினைவுத் தூபி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும். எனவே நினைவுத் தூபி அமைக்க அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நினைவுத் தூபி அமைக்கும் யோசனையின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தமிழகத்தின் தஞ்சாவூரில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய வீட்டுத்திட்ட மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
Next post 14 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது