விபசார நிலையம் நடத்திய நால்வர் கைது
Read Time:54 Second
கம்பஹாவிலுள்ள பெலும்மஹர பகுதியில் விபசார நிலையமொன்றை நடத்தியதாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும் ஆண் ஒருவரையும் வலன குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை, எம்பிலிப்பிட்டிய, அங்குனுகொலபலஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 – 41 வயதிற்கும் இடைப்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர்களை கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Average Rating