ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு!!
கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒரு கும்பல் பெண்களை சப்ளை செய்து வந்தது.
இந்த கும்பல் தொழில் அதிபர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை படம் பிடித்து அதை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்தது.
இதுபோல சஜிகுமார் என்பவரை இந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியபோது, அவர் இதுபற்றி கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சஜிகுமார் மூலம் அந்த கும்பலைச் சேர்ந்த ருச்சனா, பிந்தியா ஆகிய 2 இளம்பெண்களை கைது செய்தனர்.
அவர்கள் மீது ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற தொழில் அதிபர் தற்கொலை செய்த சம்பவத்திலும் ருச்சனா, பிந்தியா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் ரவீந்திரனிடம் பணம் கேட்டு மிரட்டியதும், இவர்களின் மிரட்டலுக்கு பயந்து அவர் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.
எனவே போலீசார் ரவீந்திரன் இறந்த வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ருச்சனா, பிந்தியா ஆகியோர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபோல வேறு யாரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
Average Rating