சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரரை மனைவியும் மகளும் அடித்தே கொன்ற கொடுமை!!

Read Time:1 Minute, 38 Second

ff4b4d50-3eb8-4880-b591-9aac05623e2d_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள கோச்சிட் கிராமத்தை சேர்ந்தவர், ஜப்பார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

இரு மகள்களுக்கும் திருமணமாகி மூத்த மகள் கணவரது வீட்டிலும், இளைய மகள் கணவருடன் தந்தையின் வீட்டிலும் வாழ்ந்து வருகின்றனர். ஜப்பாரின் பெயரில் உள்ள சொத்துக்களை எல்லாம் இளைய மகளான ஷஹீனின் பெயருக்கு எழுதித்தரும்படி மனைவி மஹேஜபானும் ஷஹீனும் அவரை வற்புறுத்தி வந்துள்ளனர்.

இரு மகள்களுக்கும் சரிசமமாக சொத்துக்களை பிரித்து தர வேண்டும் என்று எண்ணிய ஜப்பார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி மஹேஜபானும் இளைய மகள் ஷஹீனும் அவரை கொல்லும் நோக்கத்தில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

உடலின் பல பகுதிகளில் காயமடைந்த ஜப்பார், சுல்தான்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர கொலை தொடர்பாக மஹேஜபானையும், ஷஹீனையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தை கைது!!
Next post ரெயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்!!