உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்-இங்கிலாந்து கால் இறுதியில் மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகின்றன. லீக் ஆட்டத்தின் முடிவில் ஜெர்னி, ஈக்வடார், இங்கிலாந்து, சுவீடன், அர் ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, இத்தாலி, கானா, பிரேசில், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், உக்ரைன் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. `நாக்அவுட்’டான 2-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன. இந்த இரு அணிகளும் கால் இறுதியில் மோதுகின்றன. நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கிலும், போர்ச்சுக்கல் 1-0 என்ற கணக்கிலும் ஆலந்தையும் தோற்கடித்தன.போர்ச்சுக்கல்-இங்கிலாந்து அணிகள் கால் இறுதியில் மோதுகின்றன. ஜுலை 1-ëந்தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
மற்ற கால் இறுதியில் மோதும் அணிகள் நாளை நள்ளிரவுக்குள் தெரிந்து விடும். எஞ்சிய நாடுகளில் இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரேசில், ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் கால் இறுதிக்கு தகுதி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.