புதுவை அருகே ரவுடி கொலை: மனைவியை அபகரித்ததால் நண்பர் தீர்த்து கட்டினார்!!

Read Time:2 Minute, 51 Second

b5abce0f-e671-4e69-93f9-0033e340dda6_S_secvpfபுதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 31), பிரபல ரவுடி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்தபோது மர்ம கும்பல் உள்ளே புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ராஜாவை அவரது நண்பர் பொம்மையார்பாளையத்தை சேர்ந்த கணேசன் (35) கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ராஜாவும், கணேசனும் நண்பர்களாக இருந்து வந்தனர். கணேசனுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

கணேசன் வீட்டுக்கு ராஜா அடிக்கடி வருவது வழக்கம். இதன் காரணமாக ராஜாவுக்கும், மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கணேசன் மினிடெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். வேலை காரணமாக அடிக்கடி கணேசன் வெளியே சென்றுவிடுவார்.

அந்த நேரத்தில் கணேசன் வீட்டுக்கு ராஜா வந்து செல்வார். அப்போது மாலாவுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது தீவிரமாக மாறியது.

இதையடுத்து மாலா தனது கணவரை பிரிந்து ராஜாவுடன் சென்றுவிட்டார். பொம்மையார்பாளையத்தில் அவர்கள் தங்கினார்கள். ராஜா மூலம் மாலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மனைவியை ராஜா பறித்து சென்றுவிட்டதால் கணேசன் ஆத்திரத்தில் இருந்தார். ராஜாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் சிலரை ஏற்பாடு செய்தார். நேற்று இரவு கணேசனும் அவரது நண்பர்களும் பயங்கர ஆயுதங்களுடன் ராஜா வீட்டுக்கு சென்று அவரை வெட்டி கொலை செய்தனர்.

கொலையாளிகள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். கொலை நடந்த இடத்தை இன்று விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பார்வையிட்டார். கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகாசியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை: கணவர் ஆத்திரம்!!
Next post வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூண்டில் சிக்கிய குரங்குகளை மீட்க போராடிய ஆண் குரங்கு!!