காக்கை தீவு பகுதியில் அனுமதியின்றி கொட்டப்பட்ட திண்மக்கழிவுகள் பிரதேசசபையின் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.!!
பிரதேசசபையின் அனுமதியின்றி காக்கைதீவு பகுதியில் கொட்டப்பட்ட திண்மக்கழிவுகள் அதிகாரிகளின் தலையீட் டயடுத்து மீண்டும் அவை உரிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டன.
வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் காக்கை தீவு பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி தனியார் காணிகளில் பல்வேறு இடங்களில் திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதனால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பொது மக்கள் தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
உழவு இயந்திரங்கள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுகளே இவ்வாறு தனியார் காணிகளில் கொட்டப்படுவதாக பிர தேசசபையின் கவனத் துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் உழவு இயந்திரம் ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட கழிவுகள் காக்கை தீவு பகுதியில் கொட்டப் படுவதாகக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அங்கு விரைந்து பிரதேச சபை பதில் தவிசாளரும் பொது சுகாதாரப் பரிசோதகரும் குறித்த உழவு இயந்திரத்தை கையும் மெய்யுமாக பிடித்தனர்.
அத்துடன் கொட்டப் பட்ட திண்மக்கழிவுகளை மீண்டும் உழவு இயந்திரத்தில் ஏற்றி உரிய இடத்தில் கொட் டுமாறு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் சட்டத்துக்கு முரணாக செயற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சாரதிக்கு எச்சரிக்கை விடுவித்துள்ளனர்
Average Rating