திருநாவலூர் அருகே வீட்டில் தூங்கிய நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 57 Second

3d1dfb06-aaf0-4a93-bcd7-a8331c80272e_S_secvpfதிருநாவலூர் அருகே கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் அவுராம்பூ, விவசாயி. இவரது மகள் மீனா (வயது 18). இவர் சென்னையில் தங்கி நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக மீனா கூவாகம் கிராமத்துக்கு வந்திருந்தார்.

நேற்று இரவு மீனா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் ஒரு வாலிபர் நைசாக வீட்டின் உள்ளே புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த மீனாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மீனா அலறினார்.

உடனே மீனாவின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து அந்த வாலிபரை திருநாவலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கூவாகம் காலனியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சந்திர முரளி (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சந்திர முரளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் கூவாகம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோதலை தடுக்கும் நோக்கில் கூவாகம் கிராமத்திலும், கூவாகம் காலனியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காக்கை தீவு பகுதியில் அனுமதி­யின்றி கொட்டப்பட்ட திண்மக்கழி­வுகள் பிரதேசசபையின் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.!!
Next post பீகாரில் ஆசிட் வீசிய பெண்: ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!!