குடும்ப தகராறில் தூக்கு போட்டு பெண் சாவு!!
Read Time:40 Second
தண்டையார்பேட்டை கைலாச முதலி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இரும்பு பட்டரையில் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கலாவதி (வயது29). இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த கலாவதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating