பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை தலைமறைவு!!
Read Time:1 Minute, 10 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய 14 வயது சிறுவனை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.
இங்குள்ள பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த பிஹாரிபூர் ஹிரா கிராமத்தை சேர்ந்த பிரின்ஸ்(14) என்ற மாணவன், இறுதியாண்டு தேர்வுகள் நெருங்குவதால் உடனடியாக பள்ளிக் கட்டணத்தை செலுத்துமாறு தனது தந்தை துருவ் குமார் என்பவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான்.
நேற்றிரவு தந்தை-மகனுக்கிடையில் இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கும் துருவ் குமாரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Average Rating