கணவன் கண்முன்பே மனைவி கற்பழிப்பு: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு வாலிபர் இன்று கைது!!

Read Time:3 Minute, 39 Second

db8895cc-73fb-49ff-b130-e9b95e175be3_S_secvpfகரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்தவர் செல்லகுமார். இவரது மனைவி சரளா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சரளா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருடன் சென்று விட்டார். பின்னர் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை போதகாபட்டி தொட்டி நாயக்கர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் திருமணம் செய்யாமலேயே கணவன்–மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கிழங்கு மில்லில் வேலைப்பார்த்து வந்தனர். கடந்த 15–ந் தேதி இரவு 10.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் வேலை முடிந்து அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நடந்து வந்தனர். அப்போது அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.

பின்னர் அவர்கள் பாலகுமாரை தாக்கி அவரது கண் முன்பே சரளாவை முட்புதரில் வைத்து மாறி மாறி வரிசையாக கற்பழித்தனர். 5 பேரும் ஒரே நேரத்தில் கற்பழித்ததால் சரளா மயக்கம் அடைந்தார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதுப்பற்றி தெரியவந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சரளாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த ஜெயசூர்யா (20), பிர்லா (25), ராஜேஷ் (21), அக்கலாம்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார் (25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஜெயசூர்யா பாலிடெக்னிக் மாணவர் ஆவார். இவர் தன்னுடன் படித்த மாணவி ஒருவரை காதலித்து தனது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் செய்தது தெரியவந்தது. கைதான 4 பேரும் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முத்துசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து பிர்லா சேலம் மத்திய சிறையிலும், ஜெயசூர்யா, ராஜேஷ், கணேஷ்குமார் ஆகிய 3 பேரும் பரமத்திவேலூர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் அஜித் என்கிற சந்தோஷ் (19) என்பவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேர்க்கிளம்பி அருகே ரூ.25 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது!!
Next post கொருக்குப்பேட்டையில் தங்கையின் கணவர் மீது ஆசிட் ஊற்றிய பெண்!!