உ.பி தொடர் கொடூரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
உத்திரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நேற்று 7 வயது சிறுமி, பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்ஷர் மாவட்டத்தின் குர்ஜா பகுதியில் உள்ள கிர்ரா என்கிற கிராமத்தில் வசித்து வரும் பால்மிகி, தனது பக்கத்து வீட்டிலுள்ள 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாள். தற்போது, தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக மீரட் நகருக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் திவாரி தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு காரணமான பால்மிகி தலைமறைவாகி விட்டதாகவும், ஏற்கனவே, பதின்ம வயது வாலிபனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய அவனை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating