(PHOTOS, VIDEOS) சர்வோதயா நிறுவனத்தின் தேசிய தேசோதய ஒன்றுகூடல்2015.!!
ஏழ்மையும் செல்வந்தமும் அற்ற சமுதாயம் ஒன்றிற்காக நல்லாட்சி உடன்பாட்டு அரசியலை மையமாக கொண்டு சர்வோதயா நிறுவனத்தின் தேசிய தேசோதய ஒன்றுகூடல் நடைபெற்றது. மேற்படி நிகழ்வு யாழ் பிராந்திய சர்வோதயத்தின் இணைப்பாளர் S.யூகேந்திரா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வடமாகாண தேசோதய ஒன்றுகூடல் 2015 .03.24 இன்று யாழ் மாவட்டத்தில் தியாகி அறக்கொடை நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கெளரவ விருந்தினராக சர்வோதயத்தின் நிறுவகரும் தலைவரும் கலாநிதி ஏ.ரி.அரியரட்னா அவர்களும் சிறப்பு விருந்தினராக கௌரவ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் வடமாகாண இணைப்பாளர் மற்றும் பிராந்திய இணைப்பாளர் சக ஊழியர்களும், தேசோதய உறுப்பினர்கள், சர்வோதய சிரமாதன சங்க தலைவர் உறுப்பினர்கள், சர்வோதய தலைமை அலுவலக உழியர்கள், நலன்விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.
–நன்றி மன்னார் சர்வோதயம் முகநூல்–
Average Rating