சென்னிமலை அருகே 7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம்: முதியவர் கைது!!
Read Time:1 Minute, 22 Second
சென்னிமலை அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் யாழினி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 12 வயதான இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பழனி (வயது 65), தொழிலாளி.
சம்பவத்தன்று யாழினி உடல்நலம் இல்லாமல் இருந்ததால் பள்ளிக்கு செல்லவில்லை. தனது வீட்டில் அவர் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த பழனி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறினார். இதுதொடர்பாக சென்னிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.
பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Average Rating