சிறுமி பலாத்காரம்: சட்டக்கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மட்டங்கால் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (24). இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2.6.2013 அன்று அதே பகுதியில் உள்ள முந்திரிகாட்டிற்குள் 2 சிறுமிகள் ஆடுகளுக்கு இலை பறிக்க சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற செல்லப்பன் இருவரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் ஒரு சிறுமி அவரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். மற்றொரு சிறுமியை செல்லப்பன் பலாத்காரம் செய்து விட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த கந்தர்வகோட்டை போலீசார் செல்லப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்த செல்லப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் அவருக்கு விதித்தார். மற்றொரு பிரிவில் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Average Rating