மும்பை: விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவு வழியாக குதித்தவர் கைது!!

Read Time:1 Minute, 24 Second

d0a40a82-caf2-4f3b-a2c8-7b9039c68f6a_S_secvpfஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சண்டிகர் நகரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது.

மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் பயணிகளை இறக்கிவிடும் பகுதியை நோக்கி மெல்ல நகர்ந்து வந்து நின்றது. அவ்வேளையில், உள்ளே இருந்த ஒரு பயணி இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவை திறந்து கொண்டு விமானத்தில் இருந்து கீழே குதித்தார்.

குதித்த வேகத்தில் நேராக பயணிகள் வெளியே போகும் பகுதியை நோக்கி நடந்து சென்ற அவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரை சேர்ந்த அந்த நபரின் பெயர் ஆகாஷ் ஜெயின்(27) என்பது விசாரணையில் தெரியவந்தது.

கோவா செல்லும் ஆசையில் வீட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அவர் மும்பை வந்ததாகவும், ஆகாஷ் ஜெயினை காணவில்லை என உள்ளூர் போலீசில் உறவினர்கள் புகார் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை நந்திதா (அழகிய படங்கள் இணைப்பு) -அவ்வப்போது கிளாமர்-
Next post உ.பி.யில் தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை- விநாயகரின் மறுபிறவி என்று காணவரும் மக்கள் கூட்டம்!!