உ.பி.யில் தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை- விநாயகரின் மறுபிறவி என்று காணவரும் மக்கள் கூட்டம்!!
Read Time:1 Minute, 20 Second
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையின் இரு கண்களுக்கு இடையில் மூக்குக்கு மேலே தும்பிக்கை போன்றதொரு பாகமும் இணைந்துள்ளது. இது பற்றிய செய்தி அக்கம்பக்கத்து ஊர்களுக்கு எல்லாம் பரவ தொடங்கியது. தும்பிக்கையுடன் பிறந்துள்ள இந்த அதிசய பெண் குழந்தை விநாயகரின் மறுபிறவி என்ற யூகத்துடன் அந்த குழந்தையை பார்வையிட வந்த மக்கள் பக்தி பரவசத்துடன் காணிக்கை செலுத்தியபடி, வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
இதற்கிடையில், இந்த தும்பிக்கை செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஒரு டாக்டர், ‘இது ஒரு உபரி சதை வளர்ச்சி, குழந்தை வளர்ந்த பின்னர் அவளது பெற்றோர் விரும்பினால் ஆபரேஷன் மூலம் அதை அகற்றி விடலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
Average Rating