இங்கிலாந்து மற்றும் இண்டர்போல் போலீசாரால் தேடப்பட்ட பாலியல் பலாத்கார குற்றவாளி டெல்லியில் கைது!!
இங்கிலாந்தில் தொடர் பாலியல் குற்றங்களில் செய்துவிட்டு டெல்லியில் பதுங்கி இருந்த இந்தியாவை சேர்ந்த குற்றவாளியை டெல்லி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ரமிந்தர் சிங் என்ற வாலிபர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். பின்பு அங்கு சிறுசிறு வேலைகளை செய்து வந்தார். அப்போது தன்னுடன் விடுதியில் தங்கிருந்த ஓர் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிள்ளார். அதே போல் இரவு விடுதியில் சந்தித்த மற்றொரு இளம் பெண்ணையும் கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்க, அவரது தாடையை உடைத்து உள்ளார். பின்னர் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி இந்தியா வந்து விட்டார் ரமிந்தர் சிங். சண்டிகர் மற்றும் பஞ்சாப் பகுதியில் போலியான பெயரில் பதுங்கி இருந்தார்.
இந்த இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை முயற்சியிலும் ஈடுபட்ட ரமிந்தர் சிங்கை கைது செய்ய உதவுமாறு இண்டர்போலை பிரிட்டன் காவல்துறை கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தான், உளவு பிரிவின் உதவியுடன் துப்பாக்கி முனையில் ரமிந்தர் சிங்கை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
விரைவில் அவர் இங்கிலாந்து காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating