பாலியல் தொல்லை கொடுக்கும் கணவனையே போலீசில் பிடித்து கொடுக்கும் வகையில் பெண்கள் துணிந்துள்ளனர்: பெண் நீதிபதி!!
Read Time:1 Minute, 17 Second
வெள்ளக்கோவிலில் மகளிர் தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் காங்கயம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மோகனவள்ளி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மாணவ–மாணவிகள் படிக்கும் பருவத்தில் சிந்தனைகள் படிப்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வரும் இலக்கை நோக்கி லட்சியத்துடன் இருக்க வேண்டும்.
தற்போது பாலியல் தொல்லை கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இருந்தாலும், பாலியல் தொல்லை கொடுக்கும் கணவன்களை போலீசில் புகார் கொடுக்கும் அளவுக்கு பெண்கள் துணிந்துள்ளனர்.
மாணவர்கள், மாணவிகளிடம் ஒரு அண்ணனை போல அன்பை செலுத்தினால், இனிவரும் காலங்களில் பெண்களுக்கான சட்டங்களே தேவையில்லை.
இவ்வாறு நீதிபதி மோகன வள்ளி பேசினார்.
Average Rating