ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து பஸ்சில் சென்ற 40 பேர்பலி
Read Time:46 Second
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் நகரில் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு 2 ராணுவபஸ்கள் சென்றபோது சாலையோரத்தில் கிடந்த குண்டு ரிமோட்கண்ட்ரோல் மூலம் வெடிக்கச்செய்யப்பட்டது. இதில் 40பேர் பலியானார்கள். குண்டு வெடித்த அதிர்ச்சியில் பஸ் சாலையை விட்டு விலகி ஒரு கியாஸ் சிலிண்டர் கடைமீதுமோதியது.அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் கடைகள் எரிந்து சாம்பலாயின. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.