மும்பை விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!
Read Time:1 Minute, 12 Second
மும்பை புறநகர், மால்வானியில் லட்சுமி நகர் குடிசை பகுதியில் கடந்த 17-ந் தேதி இரவு விஷ சாராயம் குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த துயர சம்பவத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.
மராட்டியத்தில், விஷ சாராய சாவில் கடந்த 11 ஆண்டுகளில் இது மிக மோசமான சம்பவம் ஆகும்.
இந்த வழக்கில் மும்பை குற்றப்பிரிவு விசாரணை நடத்துகிறது.
இந்த நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிற ஆடிக் என்ற ராஜூ, டெல்லியில் டெல்லி மற்றும் மும்பை போலீசார் நேற்று நடத்திய கூட்டு வேட்டையின்போது கைது செய்யப்பட்டார்.
இவர்தான் குஜராத்தில் இருந்து மெதனால் வாங்கி, அதை சாராயம் தயாரிக்க சப்ளை செய்து வந்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
Average Rating