படிக்க விரும்புவதாக கடிதம் எழுதிய திருமணம் முடிந்த 17 வயது சிறுமியை சமூக நலத்துறையினர் மீட்டனர்!!

Read Time:1 Minute, 32 Second

9d5c9364-494d-4ccd-a162-cac30f30af05_S_secvpfதிருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு நடைபெற இருக்கும் குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், விருதுநகர் வரலொட்டி பகுதியை சேர்ந்த குணசேகரனுக்கும் திருமணம் நடக்க இருந்தது.

இதேபோல் வெம்பக் கோட்டை வெற்றிலையூரணியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சிதம்பரத்தை சேர்ந்த இமயவரம்பன்(வயது24) என்பவருக்கும் நடக்க இருந்தது. இந்த 2 திருமணங்களையும் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காரியபாட்டியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் கடந்த 12–ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், தான் படிக்க விரும்புவதாக சமூக நலத்துறைக்கு சிறுமி கடிதம் எழுதியை தொடர்ந்து அவரும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி அருகே தொழிலாளியின் மனைவியை காரில் கடத்திய போலீஸ்காரர்: டி.ஐ.ஜி.யிடம் கணவர் புகார்!!
Next post 18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்!!