ஆவடியில் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ.17 லட்சம் பறிப்பு: நண்பர் உள்பட 3 பேர் கைது!!

Read Time:1 Minute, 43 Second

24aafa74-93f6-402f-88dd-9458051b3350_S_secvpfஆவடி, ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது தொழிலுக்கு ஆதரவாக பட்டாபிராமை சேர்ந்த நண்பர் சிகாமணி இருந்தார்.

கடந்த சில மாதங்களாக ராஜ்குமாரின் செல்போனுக்கு பேசிய மர்ம வாலிபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன அவர் நண்பர் சிகாமணியிடம் தெரிவித்தார்.

அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பணம் கொடுத்து சுமூகமாக செல்லலாம் என்றார். அதனை நம்பிய ராஜ்குமார் ரூ.17½ லட்சம் வரை பல தவணைகளாக கொடுத்தார்.

இந்த நிலையில் ராஜ்குமாரின் செல்போனுக்கு மீண்டும் பேசிய மர்ம நபர் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் கேட்டார். சந்தேகம் அடைந்த அவர் இதுபற்றி ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

விசாரணையில் சிகாமணியே தனது நண்பர்கள் ஆவடியை சேர்ந்த சீனிவாசன், திருத்தணி ஆர்.கே. புரத்தை சேர்ந்த செந்தில் ஆகியோருடன் சேர்ந்து கொலை மிரட்டல் நாடகமாடி ரூ.17 லட்சம் பறித்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் சிகாமணியும், சீனிவாசனும் வக்கீலுக்கு படித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊட்டி பங்களாவில் முதியவர் கொலை: ஓரினச்சேர்க்கையின்போது துன்புறுத்தியதால் கொன்றேன் – வாலிபர் வாக்குமூலம்!!
Next post பொன்னேரியில் 10–ம் வகுப்பு மாணவியின் கழுத்து–முகம் அறுப்பு: குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்!!