பொன்னேரியில் 10–ம் வகுப்பு மாணவியின் கழுத்து–முகம் அறுப்பு: குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்!!

Read Time:2 Minute, 4 Second

a86f9a97-5099-4faf-9706-13cd34b63382_S_secvpfபொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு நடந்து சென்றனர். திருவொற்றியூர் – பொன்னேரி நெடுஞ்சாலையில் 10–க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்றபோது மர்ம வாலிபர் அவர்களை வழிமறித்தார்.

திடீரென அவர் 10–ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் ரகளை செய்தார். இதனை மாணவி கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சிறிய கத்தியால் மாணவியின் கழுத்து, முகம், கையில் அறுத்தார். ரத்த வெள்ளத்தில் மாணவி கதறி துடித்தார்.

அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் கத்தியுடன் நின்ற வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் எர்ணாவூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பது தெரிந்தது. குடிபோதையில் வந்த அவர் மாணவியின் கழுத்தை அறுத்து உள்ளார்.

அவர் எதற்காக இங்கு வந்தார். மாணவியை கத்தியால் அறுப்பதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பலத்த காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் நலமாக உள்ளார். இச்சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆவடியில் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ.17 லட்சம் பறிப்பு: நண்பர் உள்பட 3 பேர் கைது!!
Next post பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்த எய்ட்ஸ் நோயாளி சாவு: ஆண் குழந்தையை கொன்ற கொடூரம்!!