திருவனந்தபுரத்தில் கார்களில் சென்று பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கினர்!!
கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று மர்ம நபர்கள் நகை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வந்தது.
இக்கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இப்போது நகருக்குள் காரில் சென்று நகை பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த கும்பல் திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் காரில் சுற்றி வருகிறது. ஏதாவது ஒரு வீட்டில் இருந்து பெண்கள் தனியாக வருவதை கண்டால் அந்த பெண்ணின் அருகே காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கும் நபர் அந்த பெண்ணின் கழுத்தில் கிடக்கும் நகையை பறித்துக் கொண்டு காரில் ஏறிக்கொள்ள கார் மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.
நகை பறித்தவர் யார்? எந்த காரில் வந்தார்? என்பதை நகை பறிகொடுத்தவர் அறியும் முன்பு காரும், அதில் வந்தவரும் மாயமாகி விடுகிறார்கள். இதுபற்றி ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தது.
இதையடுத்து திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு காமிராக்களை அமைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையின் கீழ் பகுதியில் வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் காரில் வந்த கும்பல், நகை பறித்து சென்றது காமிராவில் பதிவாகியது.
அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அதில் இடம் பெற்ற கார் மற்றும் அதில் இருந்தவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சிகளையும் போலீசார் ஊடகங்களுக்கு அனுப்பி மக்களை உஷார் படுத்தி உள்ளனர்.
Average Rating