திருமண ஆசை வார்த்தை கூறி 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் கைது!!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் மீனா (14) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மீனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைகாரன் மகன் வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. வெங்கடேசன் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன் வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர்.
இதனால் பள்ளிக்கு சென்ற மீனாவை தொடர்பு கொண்ட வெங்கடேசன் தனது வீட்டிற்கு அழைத்தார்.
மாணவி மீனாவும் தயக்கம் இல்லாமல் காதலன் வீட்டுக்கு சென்றார். இருவரும் வீட்டிற்குள் சென்றவுடன் திடீரென வெங்கடேசன் கதவை உள்புறமாக பூட்டினார். இதனால் மீனா அதிர்ச்சியடைந்தார். மீனாவை சமரசம் செய்த வெங்கடேசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வலுகட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெங்கடேசனை நேற்று சந்தித்த மீனா உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போது மாணவி மீனாவை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறிவிட்டு வெங்கடேசன் சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவி மீனா போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை நேற்றிரவு கைது செய்தனர்.
Average Rating