மாலைக்கண் பாதிப்புக்கு தீர்வு தரும் மாம்பழம்..!!!
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். எல்லோருக்கும் பிடித்த மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை விட்டமின் ஏயும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை விட்டமின் சியும் உள்ளது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு விட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பெரும்பாலானவர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.
மாம்பழத்தின் மேல்தோல் பகுதியில் தான் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. எமது உடலுக்கு அதிக முக்கிய தேவையான கல்சியம், பொஸ்பரஸ், சோடி யம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக கிடைக்கின்றது.
வெண்ணெயில் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதேபோன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கல்சியசத்தும், கொழுப்புசத்தும் இருக்கின்றது.தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி, பல் குறித்த நோய்கள், மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்புள்ளது. இரத்த விருத்தி உண்டாகும். கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. பழுத்த பழமே சாப்பிட வேண்டும். உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு சராசரி மனிதனுக்கு தினசரி 5 ஆயிரம் யுனிட் விட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கி றது. இருதயம் வலிமை பெறும். பசியைத் தூண்டும், தோல் நிறத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும்.
புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறும். இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.
Average Rating