கொள்ளுப்பிட்டியில் விலைமாதர் விடுதி முற்றுகை

Read Time:1 Minute, 28 Second

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள கடைத்தொகுதியொன்றில் இயங்கி வந்த விலைமாதர் இல்லம் ஒன்றை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் திடீர் முற்றுகையி;ட்டு அதிலிருந்த 10 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண்களிருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இயங்கிவந்த இந்த விலைமாதர் இல்லம் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்கியமையினாலேயே தாம் இவர்களைக் கைதுசெய்ய முடிந்ததாக கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்கள் அனைவரும் 20 தொடக்கம் 25 வயதுகளுக்குட்பட்ட இளம் யுவதிகளே என்றும் இவர்கள் பலப்பிட்டிய, மத்துகம, ஹங்வெல்ல, மினுவங்கொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்த பொலிஸார் இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீரகேசரி வார வெளியீட்டின் ஊடகவியலாளர்களும் சாரதியும் கைது
Next post ஹைதி தீவுக்கு அமைதியை நிலைநாட்ட சென்றபோது பெண்களை கற்பழித்த இலங்கை ராணுவத்தினர் மீது ஐ.நா. நடவடிக்கை: கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்