வீரகேசரி வார வெளியீட்டின் ஊடகவியலாளர்களும் சாரதியும் கைது
Read Time:1 Minute, 2 Second
வீரகேசரி வார வெளியீட்டின் செய்தியாளர், படப்பிடிப்பாளர் மற்றும் சாரதி ஆகியோர் நேற்றுமாலை 4மணியளவில் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொம்பனித்தெரு பொலீசில் ஒப்படைக்கப்பட்டள்ளனர். கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அண்மையாகவுள்ள பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர் எம்.ஏ பாஹிம், படப்பிடிப்பாளர் எம்.எஸ் சலீம் மற்றும் சாரதியான கே.இராஜேந்திரன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.