பெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்…!!
ஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரியதளவில் வெற்றியடையாவிட்டாலும், பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் அனைவராலும் ஐஸ்வர்யா தனுஷ் பேசப்பட்டார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்த முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள்? யார் தயாரிக்கிறார்கள்? என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இப்படத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating