மாஸ்கோ தீவிபத்தில் சிக்கி 8 தீயணைப்பு படை வீரர்கள் பரிதாப பலி…!!
மாஸ்கோ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் நேற்றுமாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 4 ஆயிரம் சதுரமீட்டர் அளவிலான கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த தீயணைப்பு படையினர் அந்த கட்டிடத்துக்குள் சிக்கித் தவித்த நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு, வெளியே அனுப்பி வைத்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் வெளியே தப்பிவர முயன்றபோது அங்கு ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் அனலில் சிக்கிய 8 வீரர்கள் கட்டிடத்துக்குள் சிக்கி, பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இன்று காலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்னர் கரிக்கட்டைகளாக கிடந்த அவர்களின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating