சனல் – 4 ஊடகவியலாளர்கள் வவுனியா பயணித்த, ரயிலை மறித்துப் போராட்டம்
Read Time:1 Minute, 26 Second
சனல் – 4 ஊடகவியலாளர் கெலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர்கள் பயணித்த ரயில் ஒன்று அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் மறிக் கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக இந்த ரயிலும் இன்னுமொரு ரயிலும் அநு ராதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக ரயி ல்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சனல் – 4 ஊடகவியலாளர் கெலம் மெக்ரே உள்ளி ட்ட குழுவினர்கள் வவுனியாவுக்குச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ரயில் மறிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கொழும்புக்குத் திரும்புமாறு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
இது இவ்வாறிருக்க, பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் மக்ரேவை கொழும்பிற்கு அனுப்பி வைக்குமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
Average Rating