ரசாயன ஆலையில் தீ விபத்து: வங்க தேசத்தில் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் பலி…!!

Read Time:1 Minute, 41 Second

a35e95ee-106a-4899-b9e2-c91375f13a99_S_secvpfவங்காள தேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

காசிபூர் நகரில் உள்ள புபெய்ல் என்ற இடத்தில் டயர்களை உருக்கி எண்ணெய் தயாரிக்கும் ரசாயன ஆலை ஒன்று அமைந்துள்ளது. நேற்று அந்த ரசாயன ஆலையில் உள்ள பாய்லர் வெடித்ததால் அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது அங்கு 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரின் சடலங்களையும் அவர்கள் மீட்டுள்ளனர். இதில் ஒருவர் விபத்து ஏற்பட்ட ஆலைக்கு எதேச்சையாக வந்த பள்ளி ஆசிரியை ஆவார். மேலும் பலர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னதாக, அபாயகரமான இந்த பாய்லரை மூடச் சொல்லி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பல முறை ஆலை நிர்வாகத்தை எச்சரித்தும் அதை அலட்சியம் செய்த ஆலை நிர்வாகம் பாய்லரை தொடர்ந்து இயக்கி வந்ததே விபத்திற்கு காரணம் என்று உள்ளூர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாஷிங்மெஷினில் போட்டு துவைத்து விட்டார்: ரூ.3 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வீணாக்கிய பெண்…!!
Next post மதுரையில் கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து ரூ.4 லட்சம் நகை–பொருட்கள் கொள்ளை…!!