கொழும்பில் பாரிய வாகன நெரிசல் – மக்கள் பெரும் சிரமம்…!!
கொழும்பு – லேக் ஹவுஸ் சுற்று வட்டாரத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லேக் ஹவுஸ் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கொழும்பு நகரின் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலகர்கள் எனப் பலரும் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதனால் மாற்றுப் பாதைகளை உபயோகிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating