கருணாஅம்மன் இலங்கை திரும்பினார்
Read Time:1 Minute, 19 Second
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தை இலங்கையில் நடத்தி வருபவர் கருணா அம்மன். இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலி பாஸ்போர்ட்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றபோது, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தண்டனை காலம் முடிந்து கருணா அம்மன் நேற்று இலங்கை திரும்பினார். இது குறித்து, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஆசாத் மவுலானா கூறுகையில், `இன்று(நேற்று) மாலை எங்கள் தலைவர் லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்து சேர்ந்து விட்டார்’ என்று கூறினார். இலங்கை போலீசின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் குணசேகராவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, `கருணாவின் வருகை பற்றி தனக்கு எதுவும் தெரியாது’ என்று மறுத்தார்.
Average Rating